உள்நாட்டு செய்திகள்

டில்லி பறக்கிறார் கோட்டா!

பாதுகாப்பு அமைச்சின்  முன்னாள்  செயலர் கோட்டாபய ராஜபக்ச விரைவில் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார், என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகப் போட்டியிட கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் 11ஆம் திகதி கோட்டாபய  வேட்பாளராக அதிகாரபூர்வமாக, மஹிந்த ராஜபக்சவினால் அறிவிக்கப்படவுள்ளார்.

அதற்கு முன்னதாக புதுடெல்லிக்குச் சென்று இந்திய அதிகார மட்டங்களைச் சந்திக்க கோட்டா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க