சினிமா

ஹீரோவாகும் நகைச்சுவை நடிகர் சூரி!

நகைச்சுவை நடிகர்கள் ஹீரோ ஆவது தமிழ் சினிமாவுக்கு புதிதில்லை. தற்போதுள்ள கொமெடியன்களில் வடிவேலு, விவேக், சந்தானம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் ஹீரோவாகி விட்டார்கள். அந்த வரிசையில் அடுத்து வர இருக்கிறார் சூரி.

இதற்கு முன் பலமுறை ஹீரோவாக நடிக்க கேட்டும் மறுத்து வந்த சூரி, இப்போது கேட்டவரிடம் மறுக்க முடியவில்லை. காரணம் கேட்டவர் வெற்றிமாறன். வடசென்னை 2ம் பாகத்தை முடித்து விட்டு வெற்றிமாறன் இயக்கப்போகிற படத்தில் சூரிதான் ஹீரோ.

இது மதுரையை மையமாக கொண்ட படம். ஒரு சராசரி மதுரை இளைஞனின் வாழ்வியலை சொல்கிற ஒரு சீரியஸான படம். இதனை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இவ்வாண்டின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.

கருத்து தெரிவிக்க