உள்நாட்டு செய்திகள்புதியவை

நித்திரையில் இருந்தவர் கொலை: ஒருவர் கைது

பஸ்தரப்பில் நித்திரைசெய்து கொண்டிருந்த ஒருவர் அதிகாலை வேளையில்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சி.சி.டி.வி உதவியுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கலேவலை நகரிலுள்ள கலாவெவ சந்தியில் காணப்படும் சிறிய பஸ்தரிப்பு ஒன்றிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சி.சி.டி.வி பதிவுகளை ஆராய்ந்து பார்த்ததன் அடிப்படையில் மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நேரப்பதிவாளர் ஒருவர் சந்தேகத்தில் கைதாகியுள்ளார்.

கலேவலை பிரதேசத்தில் இடம் பெற்ற இச்சம்பவத்தில் மரணித்தவர் அப்பிரதேசத்தில் உள்ள கடைகளில் சுத்திகரிப்புப் பணயில் ஈடுபட்டு வரும் இரத்தோட்டைப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

கலேவலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க