உள்நாட்டு செய்திகள்புதியவை

வீரகெட்டியவில் உள்ள உணவகமொன்றில் தீ பரவல்

வீரகெட்டியவில் உள்ள ராஜபக்ஷ மத்திய கல்லூரிக்கு எதிரே உள்ள தனியார் உணவகத்தில் இன்று (ஜூலை 26) எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ பரவியுள்ளது.

தீ விபத்தால் எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ள காவல்துறையினர், இந்த சம்பவம் காரணமாக கடை சேதமடைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை தொடர்ந்து தங்காலை தீயணைப்பு படையினரால் இந்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

கருத்து தெரிவிக்க