உள்நாட்டு செய்திகள்புதியவை

சிறைச்சாலைகளில் இருந்து 837 தொலைபேசிகள், சிம் அட்டைகள் மீட்பு

நாடுமுழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது 837 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 1000 க்கும் மேற்பட்ட சிம் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை காவல்துறை பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஒன்பது மாதங்களில் 150 தேடுதல் நடவடிக்கைகளின் போது இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

களுத்துறை சிறையிலிருந்து அதிக எண்ணிக்கையிலான தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

244 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 135 சிம் அட்டைகள் பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்,  மீதமுள்ளவை குற்றவியல் புலனாய்வு பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை காவல்துறை பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க