உள்நாட்டு செய்திகள்புதியவை

பேராதெனிய முகாமைத்துவ பீடம் மீண்டும் திறக்கப்படவுள்ளது

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் எதிர்வரும் ஜூலை 29 ஆம் திகதி கல்விச் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் என பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் கடந்த ஜூலை 19 முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்திற்குள் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படுவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக நிர்வாகத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறுகல் நிலையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த விடயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை தற்காலிகமாக முகாமைத்துவ பீடம் மூடப்பட உள்ளது என துணைவேந்தர் பேராசிரியர் உபுல் பி. திசானநாயக்க முன்னதாக தெரிவித்திருத்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க