உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

உயர்தர பரீட்சை: ஒலிபெருக்கிகள் பாவனை கட்டுப்படுத்த கோரிக்கை

தற்பொழுது கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை தவிர்க்க ஒலிபெருக்கிகள் பாவனையை கட்டுப்படுத்துமாறு வடக்கின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய ஒழுங்கு விதிகளையும் சட்ட ஏற்பாடுகளையும் அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடமாகாணத்தின் சிரேஷ்ட காவல் துறை மா அதிபருக்கும் ,  மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும், மாகாண உள்ளுராட்சி ஆணையாளருக்கும் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இம்முறை ஓகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப்பரீட்சை, ஓ கஸ்ட் 31ஆம் திகதி நிறைவுக்கு வருகின்றது.

வடமாகாணத்தில் பதினையாயிரத்து இருநூற்று பதின்மூன்று (15,213) பாடசாலைப் பரீட்சார்த்திகளும், மூவாயிரத்து எண்ணூற்று ஐம்பத்தேழு (3,857) தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இப்பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

வடமாகாணத்தில் இருநூற்று பதினேழு (217) பரீட்சை நிலையங்களில் உயர்தரப்பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க