Uncategorized

‘வைத்தியரை விசாரிக்க காவல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு’

குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் ஷாஃபி மீது குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொள்ளும் விசாரணையை விசாரிக்க விரும்புவதாக காவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வைத்தியர் மொஹமட் ஷாஃபி மீதான விசாரணை குற்றப் புலனாய்வு பிரிவினரால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என செயல் காவல்துறைமா அதிபர் (ஐ.ஜி.பி) சந்தன விக்ரமரத்ன சமீபத்தில் காவல்துறை ஆணையத்துக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கின் விசாரணைகளை சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு (SIU) மாற்ற காவல்துறை ஆணைக்குழு முயன்றதாக அவர் கூறியிருந்தார்.

எனினும் வைத்தியருக்கு எதிரான விசாரணையை குற்றப் புலனாய்வு பிரிவில் இருந்து மாற்றக்கூடாது என காவல்துறை மா அதிபர் கூறியுள்ளதாக சுட்டிக்காட்டிய காவல் ஆணையத்தின் செயலாளர் காவல்துறை ஆணையத்திற்கு அந்த அதிகாரம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க