உள்நாட்டு செய்திகள்புதியவை

கோதுமை மா விலை உயர்வு :நாளை விசேட கலந்துரையாடல்

கோதுமை மாவின் விலையை அதிகரிப்பது குறித்து நாளை வாழ்க்கைச் செலவு குழு பிரதமருடன் கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளது.

கடந்த 16 ஆம் திகதி கோதுமை மாவினை இறக்குமதி செய்யும் பிறீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களானது நுவர்வோர் அதிகார சபையினது அனுமதியை பெறாது கோதுமை மாவின் விலையினை 8 ரூபாவினால் அதிகரித்திருந்தன.

இதனால் வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தினால் பாண் ஒன்றின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம் மேற்கொண்டு, பின்னர் அந்த தீர்மானம் தற்காலிகமாக நீக்கப்பட்டது.

இந்த நிலையில் மேற்படி கலந்துரையாடல் நாளை இடம்பெறஉள்ளது.

கருத்து தெரிவிக்க