உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

விடத்தல் பளையில் ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து வைப்பு!

கிளிநொச்சி- விடத்தல் பளையில் ரூபா 5 மில்லியன் செலவில் மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் நிதி உதவியுடன் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

குறித்த கட்டடம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு பிற்பகல் 2 மணியளவில் சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளர் தலைமையில் ஆரம்பமாகியது.

நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அதிகாரிகளுடைய சிறந்த அர்ப்பணிப்பின் மூலம் சிறந்த சேவையை வடமாகாணத்தில் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், சாவகச்சேரி உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பொது அமைப்புகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க