உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – கபீர் தெரிவிப்பு

இந்த மாத முடிவுக்குள் 16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுமென்று அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

சமகால அரசாங்கம் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு தேர்தல் தொகுதிக்கு தலா 300 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது.

தோட்டப்புற அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு 80 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஹட்டன் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அமைச்சர் கபீர் ஹாஷிம் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க