உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

சுதந்திரக்கட்சியின் மாநாடு செப்டம்பர் 02 இல்!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது நவீன யுகத்துக்கேற்ப அக்கட்சியின் கொள்கை அறிக்கை வெளியிடப்படவுள்ளதுடன், எதிர்கால அரசியல் பயணம் தொடர்பிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சி கைகூடாத பட்சத்தில், சுதந்திரக்கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பிலும் மாநாட்டில் விளக்கமளிக்கப்படவுள்ளது.

அத்துடன், முக்கிய சில தீர்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.

 

 

 

கருத்து தெரிவிக்க