உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ரத்கம துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

ரத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க