உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

மானிப்பாயில் துப்பாக்கிச் சூடு- பலியானவர் ஆவா குழுவை சேர்ந்தவரா?

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் நேற்றிரவு  காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில், வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர் என்று நம்பப்படும் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

மானிப்பாய்- இணுவில் வீதியில் நேற்றிரவு 8.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.கொடிகாமம் கச்சாயைச் சேர்ந்த  செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

வீதிக் காவல் படையினர் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மூன்று உந்துருளிகளில் வந்த ஆறு இளைஞர்களை மறித்து சோதனையிட முற்பட்ட போது, அவர்கள் காவல்துறையினர் மீது வாள்களால் தாக்க முற்பட்டதாகவும், அதையடுத்தே அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில் வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார் என்றும், மற்றொருவர் படுகாயம் அடைந்தார் எனவும், ஏனைய நால்வரும் தப்பியோடி விட்டனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொல்லப்பட்டவரின் சடலம், உந்துருளி, வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்கள் அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

படுகாயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்  காவல்துறையினரால் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு வருகை தந்த இளைஞனின் உறவினர் அடையாளம் காட்டினார்.

கருத்து தெரிவிக்க