உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இரத்திபுரி, நுவரெலியா, கண்டி, கேகாலை, காலி, மாத்தறை, களுத்தறை ஆகிய மாவட்டங்களில் மலைப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மண்சரிவு குறித்து அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

மண் சரிவுக்கான அடையாளங்கள் ஏதாவது அறியக் கிடைத்தவுடன் அப்பகுதிகளிலிருந்து வெளியேறிவிடுமாறும் அவ்வமைப்பு பொது மக்களைக் கேட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2.30 மணி வரை இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க