உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மரண தண்டனை: விரைவில் உத்தியோகபூர்வ நிலைப்பாடு வெளியிடப்படும்.

இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பில் விரைவில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டு அறிக்கை வெளியிடப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்;கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் அது தற்போது இலங்கைக்கு கிடைத்துவருகின்ற ஐரோப்பியாவின் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை இல்லாது செய்துவிடும் என்று ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை மரண தண்டனையை நடைமுறைப்படுத்திவிடவேண்டும் என்பதில் ஜனாதிபதி மைத்ரிபால தொடர்ந்தும் விடாப்பிடியாக இருந்து வருகிறார்.

கருத்து தெரிவிக்க