உள்நாட்டு செய்திகள்புதியவை

சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

அனுராதபுரம் – கங்காபட மாவத்தை, மிஹிந்தல பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் 64 வயது மதிக்கத்தக்கவரென தெரிவித்துள்ள பொலிசார் அவரின் தலையில் இரத்தம் படிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.

மரணம் குறித்த விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க