உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி – தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் மக்கள் பிரதிநிதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தையொன்று ஆரம்பமாகியுள்ளது.

குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது.

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய விவகாரம், முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை மற்றும் மத்திய மலைநாட்டின் இந்துமத வழிபாட்டுக்கு மக்களுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகள் குறித்து இங்கு முக்கியமாக கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க