உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

5G அலைவரிசை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாண மாநகர சபை எல்லையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படும் 5G அலைவரிசை திட்டத்திற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகர சபை முதல்வரின் அலுவலகத்திற்கு எதிராக ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்மார்ட் லேம்ப் போல்ட் எனும் பெயரில் 5G தொழில்நுட்பத்தை பரிசோதிப்பதற்கு எதிர்ப்பு வெளியிடுவதாக தெரிவித்தனர்.

யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னல்டுடன் இதுகுறித்து சந்திப்பொன்றை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை போராட்டம் இடம்பெறும் பகுதியில் பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது யாழ் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க