உனவட்டுன ருமாசல பகுதியில் கற்பாறை மீது செல்ஃபி எடுக்க முயன்றபோது கடலில் விழுந்து காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று (ஜூலை 18) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் கடல்களில் மிதந்த நிலையில் கடற்படையால் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.சடலம் பிரேத பரிசோதனைக்காக கராபிட்டி போதனாவைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இளைஞர்கள் மூவர் கற்பாறையில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்ற போது கடலில் விழுந்தனர். இதில் இருவர் தங்களை காப்பாற்றி கொண்ட நிலையில் இருவர் காணலாம் போயிருந்தனர்.
இந்நிலையில் காணாமல் போன ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
காணாமல் போன மற்ற இளைஞரைக் தேடும் பணிகள் தொடர்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க