உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ரஞ்சனுக்கு எதிராக அணிதிரளும் பிக்குகள்!

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக பண்டாரவளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பண்டாரவளை ஸ்ரீ அசோக்காராம புத்தின்த தேரர் மற்றும் ஊவா மாகாண சபை உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராய்ச்சி ஆகியோர் இணைந்தே குறித்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.

மகா சங்கத்தினரை அகௌரவப்படுத்தும் வகையிலும் – மகாநாயக்கர்களை இழிவுபடுத்தியும்  கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க உடனடியாக மன்னிப்புகோர வேண்டும் எனவும் இருவரும் வலியுறுத்தினர்.

” மன்னிப்பு கோராவிட்டால் மகாநாயக்கர்கள், பௌத்தர்கள் ஒன்றிணைந்து பதுளையிலிருந்து கொழும்புக்கு பாதயாத்திரை செல்வதை எவராலும் தடுக்கமுடியாது.

அத்துடன், ரஞ்சனுக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்றும் கோரிக்கை விடுத்தனர்.

 

கருத்து தெரிவிக்க