உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

பஸில் – விக்னேஸ்வரன் இரகசிய சந்திப்பு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவுக்கும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையில் நேற்று (17) இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்காரவே இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார் என தெரியவருகின்றது.

கொழும்பிலுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் சுமார் 45 நிமிடங்கள்வரை நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் –

ஜனாதிபதித் தேர்தல், தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம், புதிய அரசியல் கூட்டணி உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது.

 

 

கருத்து தெரிவிக்க