உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குற்றவாளிகளும் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படுவர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கும் சட்டத்தின்படி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இந்த தாக்குல்களை நடத்தியவர்கள்,துணை நின்றவர்கள், திட்டமிட்டவர்கள், தாக்குதல்களை தடுக்காதவர்கள் என்ற அனைவரும் தண்டனைக்கு உட்படவேண்டியவர்களாவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மத்திய வங்கியின் முறிவிற்பனை தொடர்பில் நாட்டில் இருந்து தப்பிச்சென்ற முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாடு கடத்துமாறு தாம் சிங்கப்பூர் பிரதமரிடம் நேரில் கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க