உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அஞ்சல் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பை விலக்கிக் கொள்ளவேண்டும்

அஞ்சல் பணியாளர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறுத்திக்கொள்ளப்படவேண்டு;ம் என்று அஞ்சல்துறை அமைச்சர் எம்எச்ஏ ஹலீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமது சேவையில் சுயாதீன தன்மை உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அஞ்சல் பரிவர்த்தனை மையத்தின் பணியாளர்கள் நேற்று மாலை 4 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இது எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தநிலையில் பணியாளர்களின் பிரச்சனைகளை தாம் அமைச்சவையின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் எனவே அஞ்சல் பணியாளர்கள் போராட்டத்தை கைவிடுமாறும் ஹலீம் கோரியுள்ளார்.

கருத்து தெரிவிக்க