வடக்கு செய்திகள்

எழுத்தாளர் சர்மிலா வினோதினியின் சிறுகதைத்தொகுப்பு வெளியீடு

ஈழத்தின் பிரபல எழுத்தாளர் சர்மிலா வினோதினியின் படைப்பான ‘மொட்டப்பனையும் முகமாலைக் காத்தும்’ என்கின்ற சிறுகதைத்தொகுப்பு நூலினை இன்று வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் சி.வி. விக்னேஸ்வரன் வெளியீடு செய்து வைத்தார்.

குறித்த நூலிற்கான அறிமுக நிகழ்வு இன்று காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழ் நாடு பூவரசி பதிப்பகத்தினூடாக கடந்த சென்னை புத்தகக் கண் காட்சியில் வெளியிடப்பட்ட இந்த நூலுக்கான அறிமுக நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது நிகழ்விற்கு பிரதம அதிதியாக வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் சி.வி. விக்கினேஸ்வரன் கொண்டார்.

குறித்த நிகழ்வில் வவுனியா தேசிய கல்வியற் கல்லாரியின் நிதி நிர்வாக உப பீடாதிபதி பொ. சத்தியநாதன், யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் ஒய்வு நிலை கல்வியலாளர் க.தர்மராசா மற்றும் ஓய்வு நிலை அதிபர் மணலாறு விஜயன் உற்பட மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க