உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மது போதையில் வாகனம் செலுத்திய 200 சாரதிகள் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் மது போதையில் வாகனம் செலுத்திய 200 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரையிலான காலப்பகுதியில் குறித்த சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கான விசேட தேடுதல் நடவடிக்கை கடந்த 5ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைய இன்று வரையான காலப்பகுதியில் 3354 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க