உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ருஹுணு பல்கலைகழகத்தின் 3 பீடங்கள் நாளை ஆரம்பம்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம வளாகத்தின் மூன்று பீடங்கள் நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளன.

விஞ்ஞான பீடம், பட்ட மேற்படிப்பு பீடம் மற்றும் மீன்படி கடல்வள பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ருஹுணு பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து முகாமைத்துவ பீடம் உள்ளிட்ட ஐந்து பீடங்கள் கடந்த 10ம் திகதியுடன் மூடப்பட்டன.

இந்நிலையிலேயே வெல்லமடம வளாகத்திலுள்ள மூன்று பீடங்களை நாளை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க