வெளிநாட்டு செய்திகள்

சுவீடனில் விமானம் ஆற்றுக்குள் விழுந்து 9 பேர் பலி !

சுவீடனில் வெஸ்டர்பாட்டன் மாகாணத்தில் உள்ள உமியா விமான நிலையத்தில் இருந்து சிறிய விமானம் ஒன்றில் 9 பரசூட் சாகஸ வீரர்கள் பயிற்சிக்காக சென்றுள்ளனர். அந்த நகரில் உள்ள ஆற்றுக்கு மேலே பறந்து கொண்டிருந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி, அதிவேகமாக கீழ் நோக்கி பறந்தது. பதறிப் போன வீரர்கள் தப்புவதற்காக கீழே குதிக்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் விமானம் ஆற்றுக்குள் விழுந்து விட்டது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கருத்து தெரிவிக்க