உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

பிரதமர் ரணிலின் வடக்கு நோக்கிய பயணத்தினை எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று மாலை எதிர்ப்பு போராட்டம் மேற்கொண்டிருந்தனர்.

கறுப்புக் கொடிகளை ஏந்திய வண்ணம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.

இதன்போது எங்களுக்கு வடகிழக்கு இணைக்கப்பட்ட முழுமையான கூட்டாட்சியே தேவை, உங்கள் ஏக்கிய ராஜ்யவை குப்பையில் போடுங்கள்,ரணிலே எங்கள் தமிழர் இராட்சியத்தைவிட்டு வெளியேறு போன்ற பல்வேறுபட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க