உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சி சிறுபான்மை மக்களை மதித்து செயற்படுகிறது.

சிறுபான்மை மக்களின் பிரச்சனைகள் ,தேவைகள் அறிந்து சிறுபான்மை மக்களை மதித்து
அக்கறையுடன் செயற்படும் ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சி தான்.

அந்தக் கட்சி அதிகாரத்தில் இருந்தால் தான் இனப்பிரச்சனைக்குத் தீர்வையும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழும் சூழலையும் ஏற்படுத்தலாமென்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாரர்ளுமன்ற உறுப்பினரும் இராஐhங்க அமைச்சருமான விஐயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்து சமய விவகார அமைச்சின் ஏற்பாட்டில் தெய்வீக சேவைத் திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு யாழ் இலங்கை வேந்தன் மண்டபத்தில் நடைபெற்றது .

இந் நிகழ்வில் விருந்தினராகக் கலந்த கொண்ட உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது..

ஐக்கிய தேசியக் கட்சிஅதிகாரத்திற்கு வருகின்ற போது நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்ற இனப்பிரச்சனைக்கு தீர்வை ஏற்படுத்தலாம். அத்தோடு அனைத்து மக்களும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழக் கூடியதாக இருக்குமென்றார்

கருத்து தெரிவிக்க