உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

முதன் முறையாக உலக கிரிக்கெட் கிண்ணத்தை இங்கிலாந்து வெற்றி கொண்டது

2019 கிரிக்கெட் உலக கிண்ணத்தை இங்கிலாந்து அணி சுவீகரித்துக்கொண்டது.
லண்டன் லோட்ர்ஸ் மைதானத்தில் இன்று இடம்பெற்ற இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் நியூஸிலாந்து அணியும் 241 என்ற சம ஓட்டங்களை பெற்றநிலையில் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கொண்டு வரப்பட்டது.
இதில் இங்கிலாந்து அணி 6 பந்துகளில் 15 ஓட்டங்களை பெற்றது.
நியூஸிலாந்து அணியும் 6 பந்துகளில் ஒரு விக்கெட் இழப்புக்கு 15 ஓட்டங்களை பெற்றது.
இதனை அடுத்து சூப்பர் ஓவரில் அதிக 4 ஓட்டங்களை பெற்ற அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க