உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘கிளிநொச்சியில் இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு’

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இலவச சட்ட ஆலோசனை மற்றும் சட்ட நுணுக்கங்கள் தொடர்பான விளக்கங்களை வழங்கும் நிழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு மற்றும் காவல்துறை, படையினர் ஆகியோர் இணைந்து இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆரம்ப நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் இரணைமடு நெலும்பிளச மண்டபத்தில் இடம்பெற்றது.

பொதுமக்களிற்கு சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் குற்ற செயல்களை கட்டுப்படுத்துதல், சட்டரீதியான சிறந்த சேவையை மக்களிற்கு வழங்குதல் தொடர்பிலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் தொடர்பான விளக்கங்களும் இதன்போது வழங்கப்பட்டது.

இதேவேளை நாளை 9 மணிமுதல் 5 மணிவரை பொதுமக்கள் தமது பிரச்சினைகளிற்கான இலவச சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிரேஸ்ட சட்டத்தரணிகள் பொதுமக்களிற்கான ஆலோசனைகளை வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆரம்ப நிகழ்வில் கிளிநொச்சி இராணுவ கட்டளை அதிகாரி, சட்ட உதவி ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் செயலாளர், பொலிஸ் மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க