உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கிளிநொச்சியில் விபத்து: வாகன சாரதி உயிரிழப்பு

கிளிநொச்சியில் உள்ள பூநகரி பரந்தன் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்றுஅதிகாலை சம்பவித்துள்ளது.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 33 வயதான ஜெனராசா சசிகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் விபத்துக்குள்ளான கப் ரக வாகனத்தின் சாரதி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து யாழ். நோக்கி பயணித்த கப் ரக வாகனமும் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க