உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் சகோதரர் கொலை மிரட்டல்: ‘விசாரணை மேற்கொள்ளப்படும்’

ஜனாதிபதியின் குடும்பத்தின் மீது நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேன  மத்திய மாகாண சபை உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவிடம் குறித்த கொலை மிரட்டலை விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக பொலன்னறுவை காவல்துறை எந்த நடவடிக்கையினையும் மேற்கொள்ளாமையினால், காவல் துறை மா அதிபருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

எனினும் எந்த தரப்பும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற அமர்வின்போது, நேற்று கருத்து வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க