உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

மஹிந்த அணியின் தேர்தல் அறிக்கை ஒக்டோபர் 10 இல் வெளியீடு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இதற்கான நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரமாண்டமாக நடைறெவுள்ளது.

பொதுஜன பெரமுனவின் வருடாந்த மாநாடு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்ச அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

அதன்பின்னரே ஒக்டோபரில் தேர்தல் விஞ்ஞாபனத்தை ( கொள்கை விளக்க அறிக்கை) வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க