உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ரிஷாட்டும் மீண்டும் பதவி ஏற்க உள்ளார்: பைசல் காமிம்

தங்கள் அமைச்சரவை பதவிகளில் இருந்து இராஜினாமா செய்த முஸ்லீம் அமைச்சர்கள் மீண்டும் தங்கள் பொறுப்புக்குக்களை ஏற்க உள்ளனர் என முன்னாள் அமைச்சர் பைசல் காமிம் கூறுகியுள்ளார்.

இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், இனப்பிரச்சினையையும் தவிர்க்கவும் முஸ்லீம் அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகினர்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றச்சாட்டுக்கள் பெரும்பாலும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதால், அவரும் தனது அமைச்சர் பதவியை மீண்டும் ஏற்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியும் , அமைச்சு பதவிகளை மீண்டும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாக எம்.பி. காமிம் கூறுயுள்ளார்.

கருத்து தெரிவிக்க