உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

இந்திய மீனவர்கள் நால்வருக்கு 2 ஆண்டுகள் சிறை

இலங்கை கடலில் மீன்பிடித்த குற்றவாளிகளாகக் கருதப்பட்ட நான்கு இந்திய மீனவர்களுக்கு நீதிமன்றம் நேற்று (ஜூலை 11) இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

இலங்கையின் வடக்கில் அமைந்துள்ள மாந்தைதீவு கடலில் குறித்த இந்திய மீனவர்களை கடற்படை அதிகாரிகள் ஜூன் 27 ஆம் திகதி கைது செய்தனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்வள ஆய்வாளர்கள் அலுவலகம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று குறித்த வழக்கு விசாரிக்கப்பட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க