உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மரண தண்டனை கைதிக்கு முதுமாணி பட்டம்.உலகில் ஐந்தாவது இடத்தை பிடித்தார்.

இலங்கையில் முதல் தடவையாகவும் உலகில் ஐந்தாவது முறையாகவும் சிறைக்கைதி ஒருவர் முதுமாணி பட்டம் பெற்றுள்ளார்.

நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்திக ஏக்கநாயக்க என்ற இந்த இலங்கையர் தமது முதுமாணி பட்டத்தை பெற்று கொண்டார்.

இவர் களனி பல்கலைக்கழகத்தில் தமது முதுமாணி கற்கையை மேற்கொண்டார்.

குற்றச்சாட்டு ஒன்றின்கீழ் மரண தண்டனையை பெற்ற இவர் தற்போது ஆயுள்கைதியாக சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் 2017ஆம் ஆண்டு இவர் தமது முதுமாணி கற்கையை ஆரம்பித்தார்.

இலங்கையின் வரலாற்றில் சிறைக்கைதி ஒருவர் முதுமாணி பட்டம் பெற்றமை இது முதல் தடவையாகும்.

கருத்து தெரிவிக்க