இலங்கை

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1278 ஆக உயர்வு.

இன்றைய தினம் இலங்கையில் கொரோனா தொற்றினால் 96 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் 88 பேர் குவைத் நாட்டிலிருந்து இலங்கைக்கு வரவழைக்கப்பட்டவர்கள் எனவும் மிகுதி 8 பேர் கடற்கரை சிப்பாய்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை இலங்கையில் 1278 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 556 பேர் இன்னமும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதுடன் இதுவரை 712 பேர் குணமடைந்துளளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை இலங்கையில் 10 பேர் கொரோனாவின் தாக்கத்தினால் பலியாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க