ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, தலிபான்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. எனினும் தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லை என தலிபான்கள் அறிவித்ததை தொடர்ந்து, அவர்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வான்வழி, தரைவழி தொடர் தாக்குதலில் சாகிப் மாவட்டத்தில் உள்ள குர்கான் தாபா பகுதியில் இருந்த தலிபான்களின் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன. இதில் 20 தலிபான்கள் கொல்லப்பட்டதுடன் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க