உள்நாட்டு செய்திகள்

கோட்டையிலிருந்து யூனியன் பிளேஸ் வரை படகு சேவை

வாகன நெறிசலைக் குறைப்பதற்காக கோட்டையிலிருந்து யூனியன் பிளேஸ் வரையில் படகு சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு காணி அபிவிருத்தி கூட்டுதாபனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைவாக இலங்கை கடற்படையினால் பூர்த்தி செய்யப்பட்ட குளிரூட்டப்பட்ட பயணிகள் போக்குவரத்து படகின் வெள்ளோட்டம் பெருநகர மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையில் நடைபெற்றது.

இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டதும் கோட்டையிலிருந்து யூனியன் பிளேஸ் வரையில் 15 நிமிடங்கள் குறைவான காலப்பகுதியில் பயணிக்க முடியும்.

கருத்து தெரிவிக்க