உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘ தெரிவுக்குழு அழைப்பை ஏற்கவும் ‘ – தயாசிறிக்கு சபாநாயகர் உத்தரவு!

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அழைப்பையேற்று அதில் பங்கேற்பதே சிறந்தது – என்று தயாசிறி ஜயசேகரவுக்கு சபாநாயகர் கருஜயசூரிய ஆலோசனை வழங்கினார்.

நாடாளுமன்றம் இன்று (09) பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.

இதன்போது சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து ,  தெரிவுக்குழுவின் அழைப்பு தொடர்பில் சபாநாயகரின் நிலைப்பாடு என்னவென்று தயாசிறி ஜயசேகர வினவினார்.

இதற்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் மேற்கண்டவாறு கூறினார். அத்துடன், தெரிவுக்குழுவில் பங்கேற்காவிட்டால் அது நாடாளுமன்றத்தை அவமதித்த செயலாகவே கருதப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க