சினிமா

தன்னுடைய 14வது படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்!

த‌ற்போதைய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த காலத்திலேயே பக்க பலமாக இருந்தவர் தயாரிப்பாளர் ஆர். டி. ராஜா; சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நாயகனாக உயர்வதற்கும் காரணமாயிருந்தார். இவருடைய தயாருப்பிலேயே சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ , ‘வேலைக்காரன்’, ‘சீமராஜா’ ஆகிய படங்கள் வெளிவந்திருந்தன. அதனைத் தொடர்ந்து நான்காவதாக ராஜாவின் தயாரிப்பிலே “நேற்று, இன்று, நாளை” படத்தில் இயக்குனர் ரவிக்குமாரின் இயக்கத்தில் ராகுல் பிரீத் சிங்குடன் இணைந்து நடிக்க, ஏ. ஆர் ரஹ்மான் இசையில் கடந்த ஜீன் மாதம் படப்பிடிப்புக்களை தொடங்கியிருந்தார்கள். சிவாவின் 14வது படமான இப்படம் சில தடங்கள்களின் காரணமாக படப்பிடிப்பு நின்றுபோயிருந்தது. அதற்கு காரணம் தயாரிப்பாளர் ராஜா நிதி நெருக்கடிக்கு ஆளாகியமையே காரணம் என்று சினிவட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளது. அதனால், சிவா தன்னுடைய 14வது படத்தை தானே தயாரிக்க முடிவு செய்துவிட்டாராம். பிரமாண்டமாக உருவாகும் இப்படம் நின்று விடக்கூடாது என்பதற்காக திரையுலகின் சிலரது உதவியுடன் இப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க