உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

21/4 தாக்குதல் – ஜனாதிபதி மீதும் சட்டம் பாயும்! சுமந்திரன் எச்சரிக்கை

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அழைப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரிக்கும் பட்சத்தில் அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவுக்குழு உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

” நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நான் ஏற்கப்போவதில்லை என்பதுடன், சாட்சியமும் வழங்கமாட்டேன்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தெரிவுக்குழுவின் அழைப்பை ஜனாதிபதி நிராகரிக்கும் பட்சத்தில் அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கமுடியுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி சட்டத்தரணியான எம்.சு, சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

” ஆம். ஜனாதிபதியின் பதவி காலம் இன்னும் ஐந்து மாதங்களில் முடிவடைந்துவிடும். அதன்பின்னர் இந்த விவகாரம் உட்பட 21/4 தாக்குதல் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும்.

அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆஜராகாவிட்டால் அவருக்கு எதிராக தற்போது நடவடிக்கை எடுக்ககூடியதாக இருக்கும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரையும் விசாரணைக்கு அழைத்துள்ளோம்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

கருத்து தெரிவிக்க