உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

அமரிக்க பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் காணிகளை பார்வையிட்டனர்………

இலங்கையில் காணிகளுக்கு வெளிநாட்டவர்கள் உரிமைக்கோரமுடியாது என்று பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

அமரிக்காவில் இருந்து வந்த சில பிரதிநிதிகள்; யாழ்ப்பாணத்தில் காணிகளை பார்வையிட்டனர் என்று வெளியான தகவல் தொடர்பிலேயே அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த தகவல் வதந்தி என்றபோதும் விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை தருமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோரப்பட்டுள்ளார்

வெளிநாட்டு அமைச்சுக்கும் இந்த விடயம் தொடர்பில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்பு சபைக் கூட்டத்திலும் இந்த விடயம் ஆராயப்படவுள்ளதாக ருவன் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்

கருத்து தெரிவிக்க