உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

யாழ் பாதுகாப்பு படை கட்டளை தளபதி – ஆளுநர் சந்திப்பு

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ,  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச்செல்லும்  நிலையில் ஆளுநரிடம் தனது ஓய்வு குறித்து தெரிவித்துள்ளார்.

போருக்கு பின்னரான காலப்பகுதியில் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் பிரதானியாக பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான செயற்பாடுகளில் திறமையாக செயற்பட்டமையை பாராட்டிய ஆளுநர் , சேவை ஆற்றியமைக்கு  தனது நன்றியினையும்  இதன் போது, தெரிவித்தார்.

இதேவேளை மக்களுடன் நட்புறவுடன் சேவையாற்றிய கட்டளைத் தளபதியை யாழ் மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும், ஓய்வு பெற்றாலும் சாத்தியமான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பினை நினைவு கூரும் வகையில் ஆளுநர் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதிக்கு நினைவுப்பரிசினை வழங்கினார்.

கருத்து தெரிவிக்க