உள்நாட்டு செய்திகள்புதியவை

போதையில் வாகனம் செலுத்திய 420 பேர் கைது

ஒருநாள் விசேட நடவடிக்கையின் போது போதையில் வாகனம் செலுத்திய 420 க்கும் மேற்பட்ட சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை (08) காலை 6 மணி வரை கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் காவல்துறையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதையுடன் வாகனம் செலுத்துவோரை கட்டுப்படுத்தும் ஒரு மாத நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் இதுவரை 1216 போதையில் வாகனம் செலுத்தியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க