உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

ஒரு தொகை ஐஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது

மெத்அம்பிட்டமின் எனப்படும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் பயணப்பொதியில் இருந்து 2 கிலோ 623 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 12.10 மணியளவில் மலேசியாவின் கோலளம்பூரில் இருந்து வருகை தந்த விமானத்தில் குறித்த நபர் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

25 வயதுடைய லாவோஸ் நாட்டவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க