உள்நாட்டு செய்திகள்புதியவை

களனி கங்கையில் 18 வயது யுவதியின் சடலம் மீட்பு

களனி கங்கையில் நீராட சென்று காணாமல் போயுள்ளதாக, கூறபட்ட யுவதி யட்டியாந்தோட்ட களனி கங்கையில் சடலமாக மீட்கபட்டுள்ளதாக யட்டியாந்தோட்ட காவல்துறை தெரிவித்துள்ளது .

ஞாயிற்றுக்கிழமை மாலை நீராடுவதற்காக யட்டியாந்தோட்ட களனி கங்கைக்கு சென்ற யுவதி நிரில் அடித்து சென்றுள்ளதாக சந்தேகமெழுந்த நிலையில் காவல்துறையினரும் பிரதேச மக்களும் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் களனி கங்கையில் இருந்து   குறித்த யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி யட்டியாந்தோட்ட மீகஹவெல்ல பகுதியை சேர்ந்த 18 வயதுடைய ஜோன் ஞானமேரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தற்போது யுவதியின் சடலம் பரிசோதனைக்காக, கரவனல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யட்டியாந்தோட்ட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க