உள்நாட்டு செய்திகள்புதியவை

மாநகர சபை எதிர்க்கட்சி தலைவருக்கு விளக்கமறியல்

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரை ஜூலை 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் (யு.என்.பி) ரொய்ஸ் பெர்னாண்டோ கட்டானா காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

வீடொன்றில் அத்துமீறி நுழைந்து ஒரு நபரைத் தாக்கியது மற்றும் தனியார் சொத்துக்களை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக 2019 மார்ச் 23 அன்று கட்டானா காவல்நிலையத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர், குறித்த வழக்கின் முக்கிய சந்தேக நபரான மாநகர சபை தலைவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க